Tamil Evangelical Lutheran Church hymnal
பாடல் 145 பாடல் வரிகள்
இயேசு நசரையினதிபதியே, – பவ
நரர்பினை யென வரும்.
தேசுறு பரதல வாசப் பிரகாசனே
ஜீவனே, அமரர் பாவனே மகத்துவ. — யேசு
1. இந்த உலகு சுவை தந்து போராடுதே,
எனதுடலும் அதுவோ டிசைந்து சீராடுதே;
தந்தர அலகை சூழ நின்று வாதாடுதே;
சாமி, பாவியகம் நோயினில் வாடுதே. — இயேசு
2. நின் சுய பெலனல்லாமல் என் பெலன் ஏது
நினைவு, செயல், வசனம், முழுதும் பொல்லாது;
தஞ்சம் உனை அடைந்தேன், தவற விடாது;
தாங்கி ஆள் கருணை ஓங்கி எப்போதும். — இயேசு
3. கிருபையுடன் என் இருதயந்தனில் வாரும்;
கேடுபாடுகள் யாவையும் தீரும்;
பொறுமை, நம்பிக்கை, அன்பு போதவே தாரும்;
பொன்னு லோகமதில் என்னையே சேரும். — இயேசு