Tamil Evangelical Lutheran Church hymnal
பாடல் 82 பாடல் வரிகள்
1. இன்னிய முகமலர்ந்து இருதய துருகுமன்பால்
உன்னத தேவமைந்தன் உலகின்பாற் கருணை கூர்ந்து
மன்னீப்பீர் என்பிதாவே மதலைகளிவர்கள் குற்றம்
மன்னீப்பீர் என்றுருகு மனுவுக்கே ஆமென் என்பீர்
2. பதிலுக்கு பதில் செயென்ற பழைய ப்ரமாணமாற்றி
புதியதங் கற்பனையை புவியதில் நாட்ட வந்த
கதி தருங் கருணைமூர்த்தி கருணையுற்றுருகி தம்மை
வதைத்திடும் யூதர்கட்காய் வருந்தியே ஜெபித்து நின்றார்
3. விற்றதும் வீணன் நானே வெறுத்ததும் வீணன் நானே
செற்றதும் சேவகன் நானே அறைந்ததும் அடிமை நானே
குத்தின கோரன் நானே கொலைபுரிந்தவனும் நானே
இத்தனை பாவந் செய்தேன் இரங்கியாட் கொள்ளுமையா
4. மன்னீப்பீர் எந்தன் பாவம் மைந்தர்தம் சிலுவை நோக்கி
மன்னீப்பீர் எந்தன் பாவம் மைந்தர் ஐங்காயநோக்கி
மன்னீப்பீர் எந்தன் பாவம் மரிக்கும் தம்மைந்தர் நோக்கி
மன்னீப்பீர் எந்தன் பாவம் ஆமென் ஆமென்