Tamil Evangelical Lutheran Church hymnal
பாடல் 27 பாடல் வரிகள்
சேவித்துக்கொண்டேன், ஐயா, – சீர்பாதத்தைத் தரிசித்துக் கண்டேன், ஐயா.
1. ஆவிக்குரிய மணவாளன் இயேசுகிறிஸ்து
ஜீவப்பிரான் ஒரு தேவ குமாரனை நான் – சேவித்துக்
2. சந்தக்ருபை’ சிறந்த சத்ய பிதாவின் ஒரு
மைந்த கிறிஸ்துவே, நின் மகத்துவ ப்ரசன்னத்தைச் -சேவித்துக்
3. நீற்றுப் பூச்சைத் துறந்து நெஞ்சம் உருகிச்சென்று
ஆத்துமத் தாலும் உண்மை யாலும் பணிந்து நின்று – சேவித்துக்
4. சுத்தமலர் விடுத்துக் காவின்மலர் தடுத்துப்
புத்திக்கமலமென்ற பொற்பின் மலர்தொடுத்து- சேவித்துக்
5. காலையும் மாலையும் கருதியுமடியான் ஜெப
மாலையுருச் செபித்து மனதுப் பரவசமாய் – சேவித்துக்