Tamil Evangelical Lutheran Church hymnal
பாடல் 234 பாடல் வரிகள்
1. உலகும் வானும் செய்தாளும் ஒப்பில் சர்வ வல்லவராய்
இலகுமருளாம் தந்தையாம் எம்பிரான்றனை நம்புகிறேன்
அவரொரு பேறாமைந்தனுமாய் ஆதிமுதலெங்கர்த்தனு மாய்த்
தவறிலேசு க்கிறிஸ்துவையும் சந்ததமே யான் நம்புகிறேன்
பரிசுத்தாவி அருளதனால் படிமேல் கன்னிமரியிடமாய்
உருவாய் மனுஅவதாரமாய் உதித்தாரெனவும் நம்புகிறேன்
2. பொந்துபிலாத்ததி பதினாளில் புகலருபாடுகளையேற்று
உந்துஞ் சிலுவையறையுண்டு உயிர்விட்டாரென நம்புகிறேன்
இறந்தே அடங்கிப் பாதாளம் இறங்கி மூன்றாம் தினமதிலெ
இறந்தோரிட நின்றே உயிரொ டெழந்தாரெனவும் நம்புகிறேன்
சந்தத மோட்சம் எழந்தருளிச் சருவவல்ல பரனான
எந்தை தன்வலப் பாரிசமே யிருக்கிறாரென நம்புகிறேன்
3. உயிருள்ளோரை மரித்தோரை உத்தமஞாயந் தீர்த்திடவே
ஜெயமாய்த் திரும்பவருவாரெனச் சிந்தையார நம்புகிறேன்
பரிசுத்தாவியை நம்புகிறேன் பரிசுத்தமாமானப் பொதுச்சபையும்
பரிசுத்தர்களின் ஐக்கியமும் பரிவாயுண்டென நம்புகிறேன்
பாவமன்னிப்புளதெனவும் மரித்தோருயிர்த் தெழவாரெனவும்
ஒவாநித்ய ஜீவனுமே உளதெனவும் யான் நம்புகிறேன்