Tamil Evangelical Lutheran Church hymnal
பாடல் 206 பாடல் வரிகள்
நித்தியானந்தத்தை நாடு – பர
நின்மல சுகம் தேடு, மனமே!
சத்திய மார்க்கந் தனிலேகூடு
சற்சன சங்கத்து டனுறவாடு -நித்தியா
1. இந்திர ஜாலம் உலக வைபோகம்,
இன்றைக்கிருப்பது வோசந்தேகம்
அந்தர மின்னல்போல் அழியுமித்தேகம்
ஐயோ! அதோடுனக் கென்ன சிநேகம். -நித்தியா
2. தன தானிய முதலான
சம்பத்து, சாசுவதமோ? அதற்காயிரந் தத்து,
தினமுங் கவலையை விளைத்திடும் வித்து
சீச்சீ! அதனை விரும்பல்விபத்து. -நித்தியா
3. காண்பதெல்லாம் நிலையாது, அநித்தியம்
காய மிறந்திட வேணும் அகத்தியம்
வீண்பொருள் மீதுனக் கென்ன பயித்தியம்
வேதாகமங்கள் சொல்வதே சத்தியம் -நித்தியா
4. மெய்யோ ஒன்றுக்கு முதவாப் பண்டம்
மிருகாதிகள் சூழ் மாமிசக் கண்டம்,
பொய்யோ இதற்கிங்கு நித்திய கண்டம்
புண்ணியஞ் செய்யுனக் காயிரந் தண்டம் -நித்தியா