Tamil Evangelical Lutheran Church hymnal
பாடல் 182 பாடல் வரிகள்
நித்தம் முயல் மனமே ! பரி
சுத்த ஜீவியத்தில் மெத்த வளர நீ
1. அத்தன் யேசுவினில் பத்தியாய் அமர்ந்து
சத்திய வேதத்தால் நித்தம் உன்னைப் போஷி!-நித்
2. அல்பகல் யேசுவோ டதிக நேரத்தை
ஆசையாய்க் கழி நீ ,அவரைப் போலாவாய்,- நித்
3. தேவனின் பிள்ளைகள் யாவரையும் நேசி !
ஆவலாய் எளியோர்க் கன்பாலுதவி செய் ,-நித்
4. இயேசுவே உந்தனை என்றும் நடத்துவார் ;
இன்ப துன்பத்திலும் அன்பாய் நீ பின் செல்லு .-நித்
5. எந்த எண்ணத்தையும் இயேசுவின் கீழ் ஆக்கி ,
உந்தனை உள்ளத்தில் அமர்ந்திரு சாந்தமாய்,- நித்
6. மேவும் அன்பினுக்குள் தேவாவி நடத்த
மேலான வாழ்வுக்கு தக்கவனாகுவாய்,- நித்