Tamil Evangelical Lutheran Church hymnal
பாடல் 141 பாடல் வரிகள்
ஒருபோதும் மறவாத உண்மைப் பிதாவிருக்க
உனக்கென்ன குறை, மகனே!
சிறுவந்தொட் டுனையொரு செல்லப்பிள்ளைபோல் காத்த
உரிமைத் தந்தை யென்றென்றும் உயிரோடிருப்பார் உன்னை -ஒரூ
1. கப்பலி னடித் தட்டில் – களைப்புடன் தூங்குவார்
கதறுமுன் சத்தங்கேட்டால் – கடல் புயலமர்த்துவார்
எப்பெரிய போரிலும் ஏற்ற ஆயுதமீவார்
ஏழைப்பிள்ளை யெல்லார்க்கும் ஏற்ற தந்தை நானென்பார் – ஒரு
2. கடல்தனக் கதிகாரி – கர்த்தரென் றறிவாயே,
கடவாதி ருக்க வெல்லை – கற்பித்தா ரவர்சேயே
விடுவாளோ பிள்ளை யைத்தாய் – மேதினி யில்தனியே?
மெய்ப்பரனை நீ தினம் – விசுவாசித் திருப்பாயே – ஒரு
3. உன்னாசை விசுவாசம் – ஜெபமும் வீணாகுமா?
உறக்கமில்லாதவர் கண் உன்னைவிட் பொழியுமா? இந்நில மீதிலுனக் – கென்னவந் தாலும்
சும்மா
இருக்குமா? அவர்மனம் உருக்கமில் லாதே போமா? – ஒரு
4. உலகம் பேயுடலாசை – உன்னை மோசம் செய்யாது
ஊக்கம் விடாதே திரு – வுளமுனை மறவாது இலகும் பரிசுத்தாவி – எழில் வரம் ஒழியாது
என்றும் மாறாத நண்பன் – இரட்சகருடன் சேர்ந்து – ஒரு