Tamil Evangelical Lutheran Church hymnal
பாடல் 115 பாடல் வரிகள்
ராவில் என்னை ரட்சியும் – கருணையோடு
ராவில் என்னை ரட்சியும்
ராவில் என்னை இயேசு தேவா பாதுகாத்து
தீயோனின் வலையில் நான் விழாதபடி -ராவில்
1. சோதோமிலுள்ள ஜனம் – விரைந்து வந்து
லோத்தின் வீடழிக்கவே – வளைத்த வண்ணம் -ராவில்
பூதங்க ளொருமித் தேகமாய் வருது
நாதா இரங்கி நல் தூதரை அனுப்பும்
2. பாதுகாப்பவர் நீரே – திருச்சமூகம்
பார்த்து தைரியங் கொண்டேன் – அதையறிந்து
பாத்ரமில்லா எனை நேத்ரம்’ போலக் காத்து
காலைசேர்ப்பாய் நிதம் தோத்ரம் செய்வேனே -ராவில்
3. என்னுட தோழர்களும் – பந்துக்களுமாய்
உன்னடியில் வீழ்ந்தோம் – ஆதலால் உன்றன்
கண்மணியைப்போல பொன் மயமாய்க் காத்து
கர்த்தன் இயேசுவுக்கு நல் மகிமையுற -ராவில்