Site icon Treasure Hymns – Tamil

பாடல் 19 பாடல் வரிகள்

Tamil Evangelical Lutheran Church hymnal

பாடல் 19 பாடல் வரிகள்

 

ஆதி பிதா குமாரன் – ஆவி திரியேகர்க்கு
அனவரதமும் தோத்ரம்!- திரியேகர்க்கு
அனவரதமும் தோத்ரம்.

நீத முதற் பொருளாய்
நின்றருள் சர்வேசன்
நிதமும் பணிந்தவர்கள்
இருதயமலர் வாசன்
நிறைந்த சத்திய
ஞான மனோகர
உறைந்த நித்திய வேத குணாகர
நீடு வாரி திரை
சூழ மேதினியை
மூடு பாவ இருள்
ஓடவே அருள் செய் -ஆதி

1. எங்கணும் நிறைந்த
நாதர் – பரிசுத்தர்கள்
என்றென்றைக்கும் பணிபாதர்
துங்கமா மறைப்பிர
போதர்-கடைசி நடு
சோதனைசெய் அதி நீதர்,
பங்கில்லான், தாபம் இல்லான்,
பகர்அடி முடிவில்லான்
பண்பதாய்சு யம்பு விவேகன்,
அன்பிரக்கத யாளப்பிரவாகன்
பார்தலத்தில் சிருஷ்டிப்பு, மீட்பு ,பரி
பாலனைத்தையும் பண்பாய்
நடத்தி , அருள் .- ஆதி

2. நீதியின் செங்கோல்
கைக்கொண்டு -நடத்தினால் நாம்
நீணலத்தில்லாமல் அழிந்து,
தீதறு நரகில்
தள்ளுண்டு -மடிவோ மென்று
தேவ திருவுளம் உணர்ந்து,
பாதகர்க் குயிர் தந்த
பாலன் ஏசுவைக் கொண்டு
பரண் எங்கள்மிசை
தயை வைத்தனர்; இது நன்று
பகர்ந்த தன்னடி யார்க்குறு சஞ்சலம்,
இடைஞ்சல் வந்த
போதே தயவாகையில்
பாரில் நேரிடும்
அஞ்ஞான சேதமுதற்
சூரியன் முன் இருள்
போலவே சிதறும் .- ஆதி

Exit mobile version