Tamil Evangelical Lutheran Church hymnal
பாடல் 171 பாடல் வரிகள்
வருவாய்! தருணமிதுவே அழைக்கிறாரே,
வல்ல ஆண்டவர் இயேசுவண்டை
1. வாழ்நாளை யெல்லாம் வீண்நாளாய் வருத்தத்தோடே
கழிப்பது ஏன்? வந்தவர் பாதம் சரணடைந்தால்,
வாழ்வித்து உன்னைச் சேர்த்துக்கொள்வார். – வருவாய்
2. வானத்தின் கீழே பூமி மேலே
வானவர் இயேசு நாமம் அல்லால்
இரட்சிப்படைய வழியில்லையே,
இரட்சகர் இயேசு – வழி அவரே! – வருவாய்
3. தீராத பாவம் வியாதியையும்
மாறாத உந்தன் பெலவீனமும்,
கோரக் குருசில் சுமந்து தீர்த்தார்,
காயங்களால் நீ குணமடைய! -வருவாய்
4. சத்திய வாக்கை நம்பியே வா,
நித்திய ஜீவன் உனக்களிப்பார்;
உன்பேரை ஜீவ புத்தகத்தில்
உண்மையாய் இன்றே எழுதிடுவார்! -வருவாய்