Tamil Evangelical Lutheran Church hymnal
பாடல் 137 பாடல் வரிகள்
மான்கள் நீரோடை வாஞ்சித்து
கதறும்போல் தேவனே
எந்தன் ஆத்துமா உம்மையே
வாஞ்சித்துக் கதறுதே
தஞ்சம் நீர் அடைக்கலம் நீர்
கோட்டையும் நீர் என்றும் காப்பீர்
1. தேவன் மேல் ஆத்துமாவே
தாகமாயிருக்கிறதே
தேவனின் சந்நிதியில் நின்றிட
ஆத்துமா வாஞ்சிக்குதே
2. ஆத்துமா கலங்குவதேன்
நேசரை நினைத்திடுவாய்
அவரின் இரட்சிப்பினால் தினமும்
துதித்துப் போற்றிடுவாய்
3. யோர்தான் தேசத்திலும்
எர்மோன் மலைகளிலும்
சிறுமலைகளிலிருந்தும் உம்மை
நிதமும் நினைக்கின்றேன்
4. கன்மலையாம் தேவன்
நீர் என்னை ஏன் மறந்தீர்
எதிரிகளால் ஒடிங்கி அடியேன்
துக்கத்தால் திரிவதேனோ
5. தேவரீர் பகற்காலத்தில்
கிருபையைத் தருகின்றீர்
இரவினில் பாடும் பாட்டு எந்தன்
வாயினிலிருக்கிறது