Tamil Evangelical Lutheran Church hymnal
பாடல் 66 பாடல் வரிகள்
மகனே உன் நெஞ்செனக்குத்
தாராயோ? – மோட்ச
வாழ்வைத் தருவேன் இது பாராயோ?
1. அகத்தின் அசுத்தமெல்லாம்
துடைப்பேனே – பாவ
அழுக்கை நீக்கி
அருள் கொடுப்பேனே
2. உன் பாவம் முற்றும்
பரிகரிப்பேனே – அதை
உண்மையாய் அகற்ற
நான் மரித்தேனே
3. பாவம் அனைத்துமே
விட்டோடாயோ? – நித்ய
பரகதி வாழ்வை
இன்றே தேடாயோ?
4. உலக வாழ்வினை
விட்டகல்வாயே – மகா
உவப்பாய்க் கதி
ஈவேன் மகிழ்வாயே
5. உந்தன் ஆத்துமத்தை
நீ படைப்பாயே – அதில்
ஊக்கமாய் வசிக்க
இடம் கொடுப்பாயே !