Tamil Evangelical Lutheran Church hymnal
பாடல் 156 பாடல் வரிகள்
1. போற்றித் துதிப்போம், எம்தேவ தேவனைப்
புனித இதயமுடனே
நேற்றும்,இன்றும், என்றும் மாறா இயேசுவை நாம்
என்றும் பாடித் துதிப்போம்.
இயேசு என்னும் நாமமே – என்
ஆத்துமாவின் கீதமே – என்
நேசரேசுவை நான் என்றும்
ஏத்தி மகிழ்ந்திடுவேன்.
2. கோர பயங்கரமான புயலில்
கொடிய அலையின் மத்தியில்
காக்கும் கரங் கொண்டு மார்பில் சேர்த்தணைத்த
அன்பை என்றும் பாடுவேன். -இயேசு
3. யோர்தான் நதிபோன்ற சோதனையிலும்
சோர்ந்தமிழ்ந்து மாளாதே
ஆர்க்கும் ஜெயதொனியோடு பாதுகாத்த
அன்பை என்றும் பாடுவேன். -இயேசு
4. தாய் தன் பாலகனையே மறப்பினும்
நான் மறவேன் என்று சொன்னதால்,
தாழ்த்தி என்னையவர் கையில் தந்து, ஜீவ
பாதை என்றும் ஓடுவேன். -இயேசு
5. பூமிமுழுவதும் சாட்சியாகவே
போங்களென்ற கட்டளையதால்
ஆவி, ஆத்துமா என் தேகம் யாவுமீந்து
அன்புத் தொண்டு செய்குவேன். -இயேசு