Tamil Evangelical Lutheran Church hymnal
பாடல் 126 பாடல் வரிகள்
புத்தியாய் நடந்து வாருங்கள்; திருவசனப்
பூட்டைத் திறந்து பாருங்கள்.
சத்தியத்தைப் பற்றிக் கொண்டு
தன்னைச் சுத்தி பண்ணிக்கொண்டு,
நித்தமும் ஜெபம், தருமம் நீதிசெய்து, பாடிக்கொண்டு -புத்தி
1. ஆருடைய பிள்ளைகள் நீங்கள்? -திரு உரையில்
அறிந்து உணர்ந்து பாருங்கள்;
சீருடைய தெய்வப் பிள்ளைகள் -நீங்கள்; ஏதிந்த
தித்தரிப்பு’ செய்யும் வகைகள்?
கூருடன் மெய்த் திருமறை குறித்துச் சொல்வதைத் தினம்
நேருடன் ஆராய்ந்து பார்த்து நித்திய ஒளியில் தானே – புத்தி
2. ஆவியை அடக்காதிருங்கள்; நான் சொல்லுவதை
அசட்டை செய்யாமல் பாருங்கள்;
ஜீவனை அடையத் தேடுங்கள்; – இயேசுகிறிஸ்தின்
சிந்தையைத் தரித்துக் கொள்ளுங்கள்;
மேவியே ஜெபம் மன்றாட்டு, விண்ணப்பம் வேண்டுதலோடு
தாவி, இயேசுவைப் பிடித்து,
தளரா நடையோடுன்னிப் -புத்தி
3. இயேசுகிறிஸ்தையன் பதத்தைத் – துதித்துப் போற்றி,
இன்பமாய்ச் சத்திய வேதத்தை
வாசித்து ஆராய்ந்து நலத்தை – பிடித்துளத்தில்
வைத்துக்கொண்டு, இவ்வுலகத்தை
நேசியாமல் பகைத்துங்கள் நித்திய ரட்சிப்பைத் தினம்
ஆசையோடு தேடி, நீங்கள் அடையும்படி முற்றிலும் -புத்தி
4. ஜாதி பேதம் சொல்வார் அல்லவோ? – கிறிஸ்தவர்கள்
தாமே தெய்வ ஜாதி அல்லவோ?
நீதி பரிசுத்தர் அல்லவோ? – மகிமையுள்ள
நேசம் மிகு ராஜா அல்லவோ?
வேதனை உண்டாக்கும் ஜாதி வேற்றுமையை விட்டு மறை
ஓதியபடி எல்லாரும் உத்தமக் கிறிஸ்தோராகப் -புத்தி
5. பரிசுத்த கூட்டம் அல்லவோ? – நீங்கள் எல்லாரும்
பரன் மகன் தேட்டம்” அல்லவோ?
தரிசிக்க நாட்டம் அல்லவோ? – கிறிஸ்தின் உள்ளம்
தன்னிலே கொண்டாட்டம் அல்லவோ?
பரிசினை’ செய்தவர் பொற்பாதத்தை மனதில் உன்னிக்
கரிசனையோடு தேடிக் காணத் தீயோன் நாணப் பாடிப் – புத்தி