Tamil Evangelical Lutheran Church hymnal
பாடல் 96 பாடல் வரிகள்
மகிழ் மகிழ் மந்தையே, நீ; அல்லேலுயா! பரன்
மைந்தன் பரமேறினார், அல்லேலுயா !
மகிழ், மகிழ்; பரம மைந்தன் மகத்துவ பரமேறினார்; திகழ் திருச் சேனை பாடும்
அல்லேலுயா ,இன்று – மகிழ்
1. வானமெல்லாம் நிரப்ப மனுஷ மைந்தன் எல்லா
வானங்கள் மேலறினார் அல்லேலுயா!
தீனதயாளு நம்மைச் சேர்ந்த தலைவராயினார்,
ஞானமுடன் பாடுங்கள், அல்லேலுயா, இன்று -மகிழ்
2. ஏசுபரன் நமக்கு இறையானார் இது
எல்லார்க்குஞ் சந்தோசம் அல்லேலூயா
வாசம் நாம் செய்ய தந்தை வளவில் இடம்பிடித்த
நேசமுன்னத நேசம் அல்லேலூயா, இன்று -மகிழ்
3. தந்தை வலப்பாகத்தில் சத்திய கிறிஸ்து எங்கள்
சத்துருக்கள் மேற்சிறந்தார், அல்லேலுயா!
சொந்தக் காயங்கள் காட்டிச் சுகிர்தமுடன் ஜெபிப்பார்;
மந்தையே, உந்தனுக்காய் அல்லேலுயா, இன்று- மகிழ்
4.மோட்ச சுதந்தரர் நாம் வானோருக்கும் ஒப்பர்,
முடிவில்லாப் பாக்கியர் நாம், அல்லேலுயா!
பாழ்ஜெகம் நிலையல்ல ,பரம சஞ்சாரிகள் நாம்
சூட்சுமக் கர்த்தனுக்கே அல்லேலுயா, இன்று -மகிழ்
5.பூதலமந்தமட்டும் உங்களுடனே நித்தம்
புனிதன் இருப்பேனென்றார்; அல்லேலுயா!
ஏதேமக்குக் குறைச்சல் ஏசெங்களோடிருந்தால்,
யாதுமோசந்தொடரும்? அல்லேலுயா, இன்று