Tamil Evangelical Lutheran Church hymnal
பாடல் 9 பாடல் வரிகள்
எந்நாளுமே துதிப்பாய் – என்னாத்துமாவே, நீ
எந்நாளுமே துதிப்பாய்!
இந்நாள் வரையிலே உன்னதனார் செய்த
எண்ணில்லா நன்மைகள் யாவு மறவாது.
1. பாவங்கள் எத்தனையோ, – நினையா திருந்தாருன்
பாவங்கள் எத்தனையோ?
பாழான நோயை அகற்றி குணமாக்கிப்
பாரினில் வைத்த மகா தய வைஎண்ணி
2. எத்தனையோ கிருபை, –
உன்னுயிர்க்குச் செய்தாரே
எத்தனையோ கிருபை
நித்தமுனைமுடி சூட்டினதுமன்றி,
செத்திடாதபடி ஜீவனை மீட்டதால்.
3. நன்மையாலுன் வாயை-நிறைத்தாரே பூர்த்தியாய்
நன்மையாலுன் வாயை;
உன்வயது கழுகைப்போல் பலங்கொண்டு,
இன்னும் இளமைபோலாகவே செய்ததால்.
4. பூமிக்கும் வானத்துக்கும் உள்ள தூரம் போலவே,
பூமிக்கும் வானத்துக்கும்;
சாமி பயமுள்ளவர் மேல் அவர் அருள்
சாலவும் தங்குமே, சத்திய மேயிது.
5. மன்னிப்பு மாட்சிமையாம்- மாதேவனருளும்
மன்னிப்பு மாட்சிமையாம்;
எண்ணூவாயோ கிழக்கு மேற்கும் தூரமே?
மண்ணில் உன்பாவம் அகன்றதத்தூரமே.
6. தந்தைதன் பிள்ளைகட்கு – தயவோ டிரங்கானோ
தந்தைதன் பிள்ளைகட்கு
எந்த வேளையும்அவ ரோடு தங்கினால்,
சொந்தம் பாராட்டியே தூக்கிச் சுமப்பாரே.
