Tamil Evangelical Lutheran Church hymnal
பாடல் 87 பாடல் வரிகள்
1. மூச்சொடுங்கும் நேரம் முடிந்தது என்றீரே – இயேசு நாதா!
மூவரும் செய்த ஆலோசனை முடிந்ததோ? – இயேசு நாதா!
ஆவியாற் பேசின தீர்க்கரின் வார்த்தைகள் – இயேசு நாதா!
மேவிச் சிலுவையைத் தாவி முடிந்ததோ? – இயேசு நாதா!
2. மாண்டு மனிதரை மீட்டுக் கொண்டதினால் – இயேசு நாதா!
மானிட ரட்சிப்பு முற்று முடிந்ததோ? – இயேசு நாதா!
மீட்பின் கிருபையில் பாக்கியில் லாமலே – இயேசு நாதா!
மீட்கப்பட்டோர்களின் லக்கமும் முடிந்ததோ?- இயேசு நாதா!
3. எந்தனுக்குக் கட்டளை யிட்ட வேலையை – இயேசு நாதா!
உந்தன் கிருபையால் நான் முடிக்கச்செய்யும் – இயேசு நாதா!
சுந்தர மோட்சத்தில் என் ரட்சிப்பை முடித்தே – இயேசு நாதா!
வந்து இளைப்பாறத் தந்துதவி செய்யும் – இயேசு நாதா!
