Tamil Evangelical Lutheran Church hymnal
பாடல் 84 பாடல் வரிகள்
1. துக்கமுள்ள மாதா நின்று – சிலுவையின்கீழ்
குனிந்து மைந்தனுக்காய் அழுதாள்.
2. ஆ, மா அகோரமான – இந்தத் தூபரத்தைக்
காண யாராலும் முடியுமோ
3. இந்த ஆபத்தில் கிடந்த – ரட்சகரின்
தாயைக் கண்ட கண் எல்லாம் நனையாதோ?
4. ஒன் இவ்வாதை? எந்தத் தீங்கும் – இயேசு
சாவினாலே நீங்கும் என்றறி, என் மனமே.
5. மானிடர் பொல்லாப்புக்காக – அவர்
வாதைபட்டுச் சாக
சிலுவையில் தொங்கினார்.
6. தீர்க்கர் வாக்கு நிறைவேறும் – நாளிலே மெய்ச்சபை
சேரும் சிலுவை யண்டையிலே.
