Tamil Evangelical Lutheran Church hymnal
பாடல் 8 பாடல் வரிகள்
சுய அதிகாரா, சுந்தரக் குமாரா!
சொந்த உலகந்தனைத் துறந்த மரி மைந்தனான
1. அகிலத்தை ஒரு சொல்லால் அமைத்தனையே
அதையொரு பம்பரம் போலிசைத்தனையே
துகில்போலா காயமதை லகுவாய்ச் சமைத்ததிலே
ஜோதி பல மாதிரியாய்த் தூக்கி அங்கிலங்க வைத்த
2. நரர் பலர் கூடியரு மனைமுடிக்க
நாளெலாம் உழைத்திட்டாலும் நாள் பிடிக்குமே
மரமுயிர் தாது இன்னும் வான்புவி அனைத்தையும் ஓர்
வார்த்தையால் கணப்பொழுதில் நேர்த்தியாய் உண்டாக்கி வைத்த
3. கரை மத கற்ற குளம் புவியிலுண்டோ
கடலுக்கவன் சொல்லன்றிக் கரைகளுண்டோ?
திரைதிரையாகத் தண்ணீர் மலைபோல் குவிந்தெழுந்தும்
சேதமின்றிப் பூதலத்தை மாதயவாய்ப் பாதுகாக்கும்
4. பாவமனுவோர்
முகத்தைப் பார்த்தாயே
பாவச்சுமை தோள் சுமந்து தீர்த்தாயே
சாமியுனைப் பற்றும் தேவ தாசருக்கிரங்க வேண்டும்
தஞ்சம் தஞ்சம் ஓடிவந்தோம், கெஞ்சுமனு கேட்டருள் வாய்