Tamil Evangelical Lutheran Church hymnal
பாடல் 59 பாடல் வரிகள்
1. வாரும், பெத்லெகேம் வாரும் – வாரும்
வரிசையுடனே வாரும் வாகும்
எல்லோரும் போய் வாழ்த்துவோம் இயேசுவை
வாரும் விரைந்துவாரும்.
2. எட்டி நடந்து வாரும் – அதோ
சற்று நிமிர்ந்து பாரும்,
பட்டணம் போல்சிறு பெத்லெகேம் தெரியுது
பாரும் மகிழ்ந்து பாரும்.
3. ஆதியி லதமேவை – அந்நாள்
அருந்திய பாவ வினை
ஆ திரி தத்துவ தேவன் மனிதத்துவ
மாயினர், இது புதுமை!
4. விண்ணுல காதிபதி – தீர்க்கர்
சொன்னதி லுள்ளபடி,
மண்ணுலகில்மரி கன்னி வயிற்றினில்
மானிட னாயுதித்தார்!
5. சொல்லுதற் கரிதாமே – ஜோதி
சுந்தர சோபனமே
புல்லணை யிற்பசு முன்னணை யிற்பதி
பூபதி தான் பிறந்தார்.
6.மந்தை மாடடையில் – மாது
மரியவள் மடியதனில்,
கந்தைத் துணியதை விந்தைத் திருமகன்
காரணமாய் அணிந்தார்.
7. தூதர் பறந்து வந்து – தேவ
துந்துமி’ மகிழ் பாட,
மாதவ ஞானிகள், ஆயர்கள் பணிந்து
மங்கள மொடு நாட
