Tamil Evangelical Lutheran Church hymnal
பாடல் 53 பாடல் வரிகள்
1. அற்புதம் பாரீர் – ஓர் அதிசயம் கேளீர்
தற்பரன் மனிதனானார் – அற்புதம் பாரீர்!
2. உற்பவித்தனர் – தேவ தேவனானவர்
கற்பில் சுத்த கன்னியிடம் – உற்பவித்தனர்!
3. மாட்டகத்திலே, – சிறுநாட்டுப்புறத்திலே
தேட்டமுடன் நாட்டங்கொண்டு – மாட்டகத்திலே.
4. பாலனாயினார் – பரமஜோதிநாயனார்
காலம் வந்தபோது கர்த்தர் – பாலனாயினார்.
5. காவனத்திலே சிங்காரவனத்திலே,
பாவக் கனியைத் தாவிப்புசித்த – காவனத்திலே;
6. புரிந்தவினைக்காய் – அங்கே தொடர்ந்த பழிக்காய்
புவியில் ஏழைப் பிள்ளையானார் – புரிந்தவினைக்காய்
7. நீர் கொண்ட பாசத்தால் – என்மேல் பூண்டநேசத்தால்
நிறைந்த மகிமை துறந்துவந்தீர் – கொண்டபாசத்தால்.
8. வல்லவா சுவாமி – உம்மைக்கொள்ளுமோ பூமி
எல்லா முந்தன் செயலல்லவோ – வல்லவா சுவாமி.
