Tamil Evangelical Lutheran Church hymnal
பாடல் 215 பாடல் வரிகள்
இயேசுவுக்கு நமது தேசத்தைச் சொந்தமாக்கப்
பாசமாய் முயல்வோமே தாசரே
தேசொளி ஞாலமெங்கும் வீசும் இயேசுவில் விசு
வாசம் வைத்தன்பின் சுவிசேஷத்தை ஏந்தி
1. கங்காநதி துவக்கி கன்னியாகு மரிவரை
எங்குமே இயேசுராசா ஆளவே – அவர்
சிங்காரக்கொடி மேலிலங்கக் குடிளெல்லாம்
மங்காச் சந்தோஷ முற்று வாழவே மன்னன்
2. விந்தைப் பூர்வீக நூல்கள் தத்துவ ஞானத்துக்கு
மெத்த்ப் பேர்போன இந்து தேசமாம் – இதில்
சத்தியமாக வந்த நித்யா இயேசுவின் பரி
சுத்த பரம ஞானம் ஜோதியாய்த் தோன்ற
3. தீய மாமூல் வழக்கம் ஓய வீண்பக்தி நீங்க
மாயக் கோட்பாடு முற்றும் மாறவே – இயேசு
தூயன் சத்தியவேத ஞாயவிதிகள் உள்ளம்
பாயநம் நாட்டார் குணமாகவே வல்ல
4. நம்மை வெறுத்து இயேசுநாதனுக் கொப்புவித்துச்
செம்மையுடன் உழைத்துச் சேவிப்போம் – அவர்க்
குண்மை பாராட்டி நமக்குள்ள யாவும் படைத்து
நம்மாலியன்றளவு முயல்வோமே என்றும்
