Tamil Evangelical Lutheran Church hymnal
பாடல் 168 பாடல் வரிகள்
தருமம் செய்ய நிருபந் தனில்
சாற்றுதே பாரும் சாற்றுதே பாரும் – வேதம் தூற்றுதே’ கேளும்.
1. தசம பாகம் தருவோருக்கு – தற்பரன் ஈவார்,
தற்பரன் ஈவார் – ஆசீர் தாராளமாய் ஈவார்.
2.சோதித்துப் பார்என்னை என்றுதேவன் சொன்னாரே”,
தேவன் சொன்னாரே – என்றும் வேதம் சொல்லுதே!
3. வாங்குவதைப் பார்க்கிலும் கொடுப்பதே பாக்யம்
கொடுப்பதே பாக்யம் – பேர் எடுப்பதே யோக்யம்.
4. இரண்டு காசு போட்ட ஏழை விதவையைப் பாரு
விதவையைப் பாரு – இயேசு வியந்ததைக் கேளு
5. விசனமாய்க் கட்டாயமாய் தருமம்செய்யாதே,
பலனும் செய்யாதே ஒருபலனும் செய்யாதே.
6. அனனியா சப்பீராள் போல் ஆகவேண்டாம் நீ,
ஆகவேண்டாம் நீ, அப்படிப் போகவேண்டாம் நீ.
