Site icon Treasure Hymns – Tamil

பாடல் 159 பாடல் வரிகள்

Tamil Evangelical Lutheran Church hymnal

பாடல் 159 பாடல் வரிகள்

 

விசுவாசத்தால் நீதிமான் பிழைப்பான்; – மெய்
விசுவாசமுள்ளவன் தான் தழைப்பான்.

1. நிசமாக நாம் பாவத்தினில் பிறந்தோர்; – முழு
விஷமான பாவத்தினால் இறந்தோர். — விசு

2. உய்யும் வகையறியோம்; பெலனேயில்லை; – நரர்
செய்யும் கிரியைகளில் நலனேயில்லை. — விசு

3. பாவக் கடனொழிக்கப் பலமே யற்றோம்; – எச்
சாபம் அழிவினுக்கம் தகைமை யுற்றோம். — விசு

4. தேவன் கிருபையொன்றே நமைப் பார்க்கும்; – அவர்
மாவன்பே பாவிகளின் கடன் தீர்க்கும். — விசு

5. நீதிமானைக் குற்றஞ்சாட்ட யாராலேயாகும்? – அவன்
பாதகம் பழிமரணம், யாவுமே போகும். — விசு

6. தேவனின் பிள்ளை நானென்றே அவன் துள்ளுவான்; – தீய
பாவ வழிதனைப் பகைத்தே தள்ளுவான். — விசு

Exit mobile version