Tamil Evangelical Lutheran Church hymnal
பாடல் 147 பாடல் வரிகள்
சரணம் நம்பினேன் யேசு நாதா – ஆ இது
தருணம் தருணம் உந்தன் கருணை கூர் வேதா
1. நின் அருளால் இங்கே வந்து-என்றும்
நின் அடைக்கலமாக என்னையே தந்து
முந்நாள் வினையைத் துறந்து ஆதி
மூலமே உனக் கோலம் ரட்சியும் என்று
2. சந்நிதி முன் தொண்டன் நின்றே -என்றும்
தாயான கருணை உனக்கு உண்டென்றே
சென்னிமேல் கரம் தூக்கி நின்றே உன்னைச்
சேவிக்கும் எளியேனைக் கோபிக்காய் என்றே
3. அலைவாய்த் துரும்புபோல் ஆடி -உன
ததி கருணை வரச் செம்பாதந் தேடித்
தொலையாத வாழ்வை மன்றாடி அன்பின்
தோத்ர சங்கீர்த்தன கீதங்கள் பாடி
4. இனிய கருணை பொழிவேதா-எனை
இரு கரத்தால் அணை என் கிறிஸ்து நாதா
கனி வினை நீக்கிய நீதா-நசரைக்
கர்த்தாதி கர்த்தா உன் கருணையைத் தா தா