Tamil Evangelical Lutheran Church hymnal
பாடல் 135 பாடல் வரிகள்
வாரா வினை வந்தாலும், சோராதே, மனமே;
வல்ல கிறிஸ்துனக்கு நல்ல தாரகமே.
1. சூரன் சதித்துன் மீது வலை வீசினாலும்,
சோராதே, ஏசுபரன் தஞ்சம் விடாதே. — வாரா
2. உலகம் எதிர்த்துனக்கு மலைவுசெய்தாலும்,
உறுதி விட்டயராதே, நெறி தவறாதே. — வாரா
3. பெற்ற பிதாப்போல் உன் குற்றம் எண்ணாரே;
பிள்ளை ஆகில் அவர் தள்ளிவிடாரே. — வாரா
4. தன் உயிர் ஈந்திட்ட உன் யேசுநாதர்
தள்ளுவாரோ? அன்பு கொள்ளவர் மீதே. — வாரா
5. மரணம் உறுகின்ற தருணம் வந்தாலும்,
மருள விழாதே, நல் அருளை விடாதே. — வாரா
6. வையகமே உனக்குய்ய ஓர் நிலையோ?
வானவனை முற்றும் தான் அடைவாயே! — வாரா
