Site icon Treasure Hymns – Tamil

பாடல் 135 பாடல் வரிகள்

Tamil Evangelical Lutheran Church hymnal

பாடல் 135 பாடல் வரிகள்

 

வாரா வினை வந்தாலும், சோராதே, மனமே;
வல்ல கிறிஸ்துனக்கு நல்ல தாரகமே.

1. சூரன் சதித்துன் மீது வலை வீசினாலும்,
சோராதே, ஏசுபரன் தஞ்சம் விடாதே. — வாரா

2. உலகம் எதிர்த்துனக்கு மலைவுசெய்தாலும்,
உறுதி விட்டயராதே, நெறி தவறாதே. — வாரா

3. பெற்ற பிதாப்போல் உன் குற்றம் எண்ணாரே;
பிள்ளை ஆகில் அவர் தள்ளிவிடாரே. — வாரா

4. தன் உயிர் ஈந்திட்ட உன் யேசுநாதர்
தள்ளுவாரோ? அன்பு கொள்ளவர் மீதே. — வாரா

5. மரணம் உறுகின்ற தருணம் வந்தாலும்,
மருள விழாதே, நல் அருளை விடாதே. — வாரா

6. வையகமே உனக்குய்ய ஓர் நிலையோ?
வானவனை முற்றும் தான் அடைவாயே! — வாரா

Exit mobile version